Saturday 26 December 2015

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல்:-

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா  (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

No comments:

Post a Comment