Sunday 18 December 2022

இருமுடியை சுமந்து வந்தேன்....

இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா இறைவா
உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு)

அழுகையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா
அருகே ஓர் காலயெடுத்து வைக்கவில்லையா
காரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா
அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு)

பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா
பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா
பம்பையிலே விளக்கேடுத்தேன் காணவில்லையா
பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா
பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான்
படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா

கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா
கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா
நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான்
மேய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா
அய்யா உன் சரணமென்றே கதறவில்லையா நீ
விஸ்வமெல்லாம் காத்‌தருளும் ஜோதியல்லவா(இரு)

Tuesday 13 December 2022

பச்சை பட்டாடை கட்டி

பச்சை பட்டாடை கட்டி
பரியின் மேல் ஏறி வரும்
பச்சை குழந்தை இவர் யாரய்யா
 பார்த்தவர்கள் மயங்குவதை பாரய்யா
யாரய்யா இவர் யாரய்யா
யாரய்யா என்ன கேளைய்யா
கோடி சூர்யன் போல் முகமும்
புன்னைகையுடன் கருணை விழியும்
வீரதிலகமுடன் வருகின்றான்
 பாலன் இவன் யாரென்று கேளைய்யா
மாலனோ இல்லை  சோமனோ
மால்மருகனோ என்று கேளைய்யா
(பச்சை பட்டாடை கட்டி )
இந்திரன் குடை பிடிக்க
சந்திர சூரியன் சாமரம் போட
பந்த பாசமொடு  வாரார் பாரய்யா
விந்தையான பவனி இதை பாரய்யா

பூலோகமோ தேவதேவனோ
பூமாரியை பொழிவதை பாரய்யா
(பச்சை பட்டாடை கட்டி )