Saturday 2 January 2016

எந்த மலை சேவித்தாலும்.....

எந்த மலை சேவித்தாலும் 
தங்கமலை வைபோகம் 
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா 
எங்கயும் நான் கண்டதில்லையே

கோடி சூரியன் உதிக்கும் மலை 
கோமலாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் அய்யன் வாழும் மலை

பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை 
பரவசத்தை கொடுக்கும் மலை
பாவ வினைகளை தீர்க்கும் மலை 
பம்பா பாலன் வாழும் மலை

சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் 
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் 
மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் 
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான் 

ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா

No comments:

Post a Comment