Friday 14 October 2016

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்...(கண்ணன் பாடல்

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்
******************************

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

Monday 10 October 2016

அகர முதல எழுத்தெல்லாம்  அறிய வைத்தாய் தேவி.(பாடல்)

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி... 

ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி... 

இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய் நீயே... 

ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய் தாயே....

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி 

இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய் 
இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய் 
ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய் 
ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய் 
உயிர் மெய் எழுத்தெல்லாம் 
தெரிய வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் 
தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து 
பேச வைத்தாய் 
அம்மா பேச வைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி 

எண்ணும் எழுத்தென்னும் 
கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் 
கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை 
ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை 
ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து 
அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து 
அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து 
குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து 
குரல் தந்தாய்
ஓம் கார இசை தந்து 
உயர வைத்தாய் தேவி...