Monday 30 November 2015

தியான ஸ்லோகம்


"நேத்ரானந்தம்  ப்ரஸன்னாஸ்யம்
மோஹனாங்கம் மஹேசம்
பக்தாவாஸம் குதுக வரதம்,

ஸ்வர்ண வர்ண ஸ்வரூபம்
ஸெளரீநாத ப்ரதீ ஸ்வரூபம்
காஞ்சனாலய வாஸம்,

வந்தே ஆர்யம் வேத்ரபுர ஸ்திதம்
விச்வ பூ ைஷக பூஷம்".

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

விளக்கம்:-
-----------------
கண்களால் தரிசிப்பதற்கு ஆனந்தமானவரும்
மலர்ந்த முகம் கொண்டவரும்.

மோஹனமான வடிவழகு கொண்ட இறைவரும்;
தன் பக்தர்களுக்கு உறைவிடமாகவும். அவர்களது
இஷ்டங்களை அளிப்பவரும் தங்கம் நிறத்தில்
ஜொலிப்பவரும்.

ஸெளரீநாதனின் (பண்டைய சபரி மலையின்)
ப்ரதிபிம்பம் போல விளங்குபவரும் தங்கக் கோயிலில்
உறைபவரும்; உலக அழகுக்கெல்லாம் அழகாக விளங்கும் பெரம்பூர் (வேத்ரபுரி = பெரம்பூர்) வாழ் ஐயப்பனை வணங்குகின்றேன்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

Sunday 29 November 2015

ஸ்ரீ ஐயப்ப நமஸ்கார ஸ்லோகம் :

ஸ்ரீ ஐயப்ப நமஸ்கார ஸ்லோகம் :

"ஆஸ்யாம கோமள விசாலதனும் விசித்ரம்
வஸோவஸான அருணோத்பல தாமஹஸ்தம்
உத்துங்கரத்ன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்டவரதம் சரணம் ப்ரபத்யே"

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

பொருள் : ஓ அழகிய கருநிற திருமேனியை உடையவரே !! ஊழிக்காலம் வரை உலகாள்பவரே !! மின்னலைப் போலவும், பளிச்சிடும் வைகறை போன்ற கைகளை உடையவரே !! நவரத்தினங்கள் பதித்த உயர்ந்த மகுடத்தை சூடியவரே !! அழகிய சுருண்ட கேசத்தினை உடையவரே !! சாஸ்தாவே !! உமக்கு நமஸ்காரம் ஐயா !!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

Saturday 28 November 2015

ஐயப்பன் விரத விதிமுறைகள்:-

1. முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.

2. ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.

‎3.அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாயனாலும் குருயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4.கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதியஉணவை ஜயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ணவேண்டும். மாலை பால்,பழம்,பலகாரம் உண்ணலாம்.

5.விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஜயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும்.

6.உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி,அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.

7.விரதகாலத்தில் கறுப்பு,நீலம்,பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும்.கன்னி ஸ்வாமிகள் கறுப்பு மட்டும்தான் அணியலாம்.

8.காலை,மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி,பால்,பழம்,கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபடவேண்டும்.

9.விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது.காலணி,குடை,மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும்.மது அருந்துதல்,பொய் பேசுதல்,மாமிசம் உண்ணுதல்,கோபம் கொள்ளுதல்,கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.

10.விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி முடிக்கும் போதும் “ஸ்வாமி சரணம்” கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாக முன்னர் அதை எக்காரணம் கொண்டும் அதை கழட்டகூடாது.நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும்.பின்னர் மறுவருடம் தான் மாலை அணியலாம்.

11.விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.இரவில் பாய்,தலையணை என்பவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.

12.மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைப்புறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளை “கொச்சி” என்றும் அழைக்கவேண்டும்.

13.மாதவிலக்கான பெண்களை பார்ப்பது, அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பது கூடாது.மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபடவேண்டும்.

14.மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை,கூட்டுவழிபாடு,பூஜை முதலியன நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும்.

15.இருமுடிக்கட்டு பூஜையை குருசாமி வீட்டிலோ,கோவிலிலோ நடத்தலாம்.கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி,ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும்.

16.யாத்திரை புறப்படும் போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ,தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்துச்செல்வதாகவோ,தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது.

17.யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி,வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய்வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும்.

18.யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமக ஏற்றிக்கொள்ளவோ,இறக்கவோ கூடாது.குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோ கொண்டு தான் அதை செய்யவேண்டும்.

19.பம்பையில் நீராடி,மறைந்த முன்னோர்க்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம்.யாத்திரை முடிந்துதும் பிரசாதங்களை ஏந்தி வந்து,வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி,இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

20. 12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

21.விரதகாலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது.

22.மாலைபோட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமிமார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் செல்லவேண்டும்.

23.யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு ஐயப்பனை பாடித்துதிப்போமாக.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா....

கணேஷ சரணம்

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

மூஷிக வாஹன சரணம் கணேஷா
மோதகஹஸ்தா சரணம் கணேஷா
வாமண ரூபா   சரணம்   கணேஷா
மகேஸ்வர புத்ரா சரணம் கணேஷா

சங்கர சுதனே சரணம் கணேஷா
சக்தியின் மைந்தா சரணம் கணேஷா
சாமர கர்ணா சரணம் கணேஷா
விளம்பித சூத்ரா சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு....

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
(சுவாமி சரணம் ஐயப்பா சரணம்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூறிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே உன்னைபார்க்க வேண்டியே தவமிருந்து (2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஏரும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார்
சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா
தூக்கிவிடையா ஏற்றிவிடையா
தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றல் அவரும் பாதத்தை தந்திடுவார்
நல்லபாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார்

சபரிமலை தனை நெருங்கிடுவார்  பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி

சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

Monday 23 November 2015

18 படிகள் உணர்த்தும் தத்துவம்

சாமியே சரணம் ஐயப்பா

(18 படிகள் உணர்த்தும் தத்துவம்)

******முன்னுரை*****

சத்ய படிகட்டுகள் ஆகிய பதினெட்டு படிகளின் மகத்துவம், தத்துவம்,பதினெட்டு படிகளில் பக்தர்களுக்கு அருள்புரிய இறைவன் இவற்றை காணலாம்.

******மகத்துவம்******

சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள்.இந்த பூமியில் பிறந்த மானுடர்கள் அனைவரும் சத்ய படிகட்டுகளை பார்க்க முடியாது,தொட முடியாது,ஏறி ஐயனை தரிசிக்க முடியாது.இந்த ஒரு மண்டலம் விரதம் இருந்து உடல்,மனம்,ஆன்மா தூய்மை செய்தது இந்த சத்யா படிகட்டுகளில் ஏறி ஐயனை தரிசிக்க தான்.

பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் எனில் அதற்கு ஒரு அதிஷ்டம் சேர்ந்த இறை அருள் இருக்க வேண்டும்.இதை அறிந்து பொண்ணு பதினெட்டு படிகளில் ஏறி ஐயன் ஐயப்பன் அருள் முழுவதும் பெற்ற வேண்டும் என குருசாமிகள் அடிக்கடி கூறுவார்கள்.அப்படி என்ன இருக்கிறது இந்த 18 படிகளில்...? வாருங்கள் காணலாம்.

ஏகாக்ஷரத்தையும், அக்ஷ்டாக்ஷரத்தையும் பக்கத்தில் எழுதினால் 18 வரும்.ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம். அக்ஷ்டாக்ஷரம் என்பது விஷ்ணுவினுடையது. சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள் பதினெட்டு புராணங்களையும், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களையும் குறிக்கிறது என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. காவல் தெய்வங்கள் இருக்குமிடமெல்லாம் பதினெட்டுபடி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள பதினெட்டுபடிகளும், ஐந்து பஞ்சேந்திரியங்கள், எட்டு ராகங்கள், மூன்று குணங்கள், ஞானம் ஒன்று. அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருகின்ற பக்தனுக்குத்தான் ஐயனை வழிபட தகுதி உண்டு.

பற்றுதல் இல்லாமல் பகவானை பூஜித்தால் அவன் திருவருள் நமக்கு கிடைக்காது.
இந்த 18 படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது. 18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, "சாமியே சரணம் ஐயப்பா" என்ற சரண கோஷத்துடன பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும்.

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது.

****** தத்துவம் ******

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்:

1.காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2.குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3.லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4.மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5.மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6.டம்பம் (வீண் பெருமை):
இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும்.அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7.அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8.சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9.ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10.தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. 11.ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12.மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். 13.அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். 14.கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15.காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16.மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17.நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. 18.மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

******இறை அருள்*******

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் 18 தெய்வங்கள் அருள் புரிகிறிர்கள் அவர்கள்:

1 ஆம் படி விநாயகர்
2 ஆம் படி சிவன்
3 ஆம் படி பார்வதி
4 ஆம் படி முருகன்
5 ஆம் படி பிரம்மா
6ஆம் படி விஷ்ணு
7 ஆம் படி ரங்கநாதன்
8 ஆம் படி காளி
9 ஆம் படி எமன்
10 ஆம் படிசூரியன்
11 ஆம் படி சந்திரன்
12 ஆம் படி செவ்வாய்
13 ஆம் படி புதன்
14 ஆம் படி குரு
15 ஆம் படி சுக்கிரன்
16 ஆம் படி சனி
17 ஆம் படி ராகு
18 ஆம் படி கேது

என 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.இந்த தெய்வங்கள் அருள் புரிய நாம் பாவம் நீக்கி சத்யா தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்யலாம்.

இந்த பொண்ணு பதினெட்டு படி ஏறும் போது நம் வாழ்க்கையில் சில கர்ம வினைகள் வற்றையும் நீக்க பெறுகிறோம் இதை நாளை காணலாம் அது வரை அனைவரும் சொல்லுங்கள்...

*சாமியே சரணம் ஐயப்பா*

பிள்ளையார் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாழ்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை மீதிலே அரசமரத்தின்  நிழலிலே 

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் 

யானை முகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர் 

பானை  வாயிற் படைத்தவர் பக்தர் குறையை தீர்ப்பவர் 

மஞ்சலிலே செய்யினும் மண்ணிணாலே செய்யினும் 
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாற்றும் பிள்ளையார் 

ஓம் நம சிவாய என்றே ஐந்தெழுத்து மந்திரத்தை 
நெஞ்சில் நாற்றும் பிள்ளையார் 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 

ஆறுமுக வேலனுக்கே அண்ணணான  பிள்ளையார் 

நேறும் துன்பம் யாவையும் நீக்கிவெய்கும் பிள்ளையார் 

பிள்ளையார் 

கலியுகத்தின் விந்தையை காண வேண்டி அனுதினம் 
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலே சுத்துவார் 
ஜெய் கணேஷ ஜெய் கணேஷ பாஹிமாம்  
ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம் 

பிள்ளையார்

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்


பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா

அவனை நாடு
அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை 
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் 
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண – தேவை பண்பாடு

அய்யப்பா

பூஜைகள் போடு
தூய அன்போடு
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல 
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்  
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் 
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான்

பொய் இன்றி

அய்யப்பா 

சரணம் அய்யப்பா (3)

Friday 13 November 2015

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச


பஜனை பாடல்கள்-ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷ்மாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷ்மாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷ்மாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷ்மாம்

மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷ்மாம்

ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ரக்ஷ்மாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷ்மாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷ்மாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீச சபரிகிரீச சபரிகிரீச ரக்ஷ்மாம்

வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ரக்ஷ்மாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷ்மாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷ்மாம்

கணேசா சரணம்

1. கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா (கணேசா)

2. கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

3. சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

4. சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

5. முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

6. அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

7. கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

8. மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

9. பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)